செய்திகள்
புஜாராவின் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார். 206 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி அடங்கும். புஜாராவுக்கு இது 9-வது சதமாகும். இந்திய மண்ணில் 7-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.
அவரது ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புஜாராவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சிறந்த சதம் இதுவாகும். அவரது குடும்பத்தினர் மைதானத்துக்கு வந்து அவரது ஆட்டத்தை பார்த்தது முக்கியமானது.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
ராஜ்கோட் புஜாராவின் சொந்த ஊர் ஆகும். அங்கு நடந்த முதல் டெஸ்டில் அவர் சதத்தை அடித்தார். இந்த ஆட்டத்தை அவரது மனைவி நேரில் ரசித்தார்.