செய்திகள்

கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம்: அப்ரிடி நீக்கம்

Published On 2016-10-28 11:00 GMT   |   Update On 2016-10-28 11:00 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து முன்னாள் கேப்டன் ஷாகீத் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏ, பி, சி என்ற பிரிவின் கீழ் வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகீத் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் ‘பி’, ‘சி’ பிரிவிலும் இடம் பெறவில்லை.

இதே போல் சையது அஜ்மல், ஜுனைத்கான் ஆகியோரும் இடம் பெறவில்லை. 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வந்த அப்ரிடி ஓய்வு முடிவை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Similar News