செய்திகள்

இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை வெல்ல ஆர்வம்: ரோஸ் டெய்லர்

Published On 2016-10-28 06:35 GMT   |   Update On 2016-10-28 06:36 GMT
இந்திய மண்ணில் முதல் முறையாக போட்டி தொடரை வெல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் என ரோஸ் டெய்லர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் கூறியதாவது:-

“வெளிநாட்டு மண்ணில் அடிக்கடி போட்டி தொடரை கைப்பற்றுவதை காணமுடியாது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் வெல்வது கடினமானது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த தொடர்களில் விளையாடியதை விட சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறோம்.

இந்திய மண்ணில் முதல் முறையாக போட்டி தொடரை வெல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். இங்கு வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவோம்” என்றார்.

Similar News