செய்திகள்

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி: கவுகாத்தி ஸ்டேடியத்தில் நடத்த வாய்ப்பு

Published On 2016-10-25 03:01 GMT   |   Update On 2016-10-25 03:01 GMT
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது.
17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 6 இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியை நடத்துவதற்காக சர்வதேச தரம் கொண்ட ஸ்டேடியங்களை தேர்வு செய்யும் பணியில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) கமிட்டி ஈடுபட்டு வருகிறது. 23 பேர் கொண்ட இந்த கமிட்டி கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தை நேற்று பார்வையிட்டது.

ஸ்டேடியத்தில் உள்ள வசதிகள் போதுமானதாக இருப்பதாக கமிட்டி உறுப்பினர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் இந்த குழுவினர் கொச்சி ஸ்டேடியத்தை ஆய்வு செய்து மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர்.

Similar News