செய்திகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஜிதுராய் வெள்ளி வென்றார்

Published On 2016-10-07 00:26 GMT   |   Update On 2016-10-07 00:26 GMT
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜிதுராய் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

போலோனா:

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் ஜிதுராய் 188.8 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதில் சீன வீரர் வெய் பாங் 190.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், இத்தாலி வீரர் ஜிசெப் ஜியோர்டானோ 170.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்த ஜிதுராய் அதன் பிறகு பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும்.

Similar News