செய்திகள்

முதல் ஒரு நாள் போட்டி : இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி

Published On 2016-08-25 09:20 GMT   |   Update On 2016-08-25 09:20 GMT
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் பகல் இரவாக சவுத்தம் டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. அசார் அலி 82 ரன்னும், சர்பிராஸ் அகமது 55 ரன்னும் எடுத்தன. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 34.3 ஓவரில் 151 ரன் எடுத்து இருக்க வேண்டும். 194 ரன் எடுத்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேசன்ராய் 56 பந்தில் 65 ரன்னும், ஜோரூட் 61 ரன்னும் எடுத்தனர்.

2-வது ஆட்டம் வருகிற 27-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

Similar News