இந்தியா
பாராளுமன்ற கூட்டத்தை ராகுல்காந்தி புறக்கணிக்கிறார்
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
- ஜெய்ராம் ரமேஷ், திக் விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை ராகுல் காந்தி புறக்கணிக்கிறார். பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளதால் அவர் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ், திக் விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கிறார்கள். பாதயாத்திரையில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.