இந்தியா

பேஸ்புக் காதலன் மிரட்டல்- செல்பி வீடியோ எடுத்தபடி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-10-07 07:02 GMT   |   Update On 2022-10-07 07:02 GMT
  • ரால பள்ளியை சேர்ந்த இம்தியாஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
  • இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பாக பழகி வந்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம் எர்ர பள்ளியை சேர்ந்தவர் சந்தியா ராணி (வயது 17). இவர் அன்னமய்யா மாவட்டம், முனகலு செருவு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது ரால பள்ளியை சேர்ந்த இம்தியாஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பாக பழகி வந்தனர்.

பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். அப்போது காதலர்கள் இருவரும் தங்களது போட்டோக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இம்தியாஸ் மாணவியின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார்.

பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

இந்த நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்த சந்தியா ராணி தன்னுடைய போட்டோக்களை இம்தியாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு விடுவாரோ என அச்சமடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சந்தியா ராணி தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். அறையில் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பாக இம்தியாஸ் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோவில் பேசி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சந்தியா ராணியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர் சப்-இன்ஸ்பெக்டர் ராம்கோபால் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இம்தியாசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News