இந்தியா

கடைக்குள் புகுந்த ஆம்னி பஸ்

Published On 2024-05-26 04:13 GMT   |   Update On 2024-05-26 04:13 GMT
  • விபத்தில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்ற படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ், கேரள மாநிலம் கொடுவள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News