இந்தியா
மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

Published On 2022-05-27 05:14 GMT   |   Update On 2022-05-27 05:58 GMT
பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்பதால் வருகிற 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என கருதப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை.

பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்பதால் வருகிற 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News