இந்தியா
மரியாதை செலுத்தும் சோனியா காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை

Published On 2022-05-21 03:32 GMT   |   Update On 2022-05-21 08:56 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News