இந்தியா
ஜோத்பூர் வன்முறை

பதற்றம் நீடிப்பு - ஜோத்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

Published On 2022-05-03 10:39 GMT   |   Update On 2022-05-03 10:39 GMT
ஜோத்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூட்டிய முதல்மந்திரி அசோக் கெலாட், அங்கு இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
ஜோத்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதில், 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.  

இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்நிலையில், ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் மே 4-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News