இந்தியா
நிலநடுக்கம்

திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2022-04-03 02:40 GMT   |   Update On 2022-04-03 02:40 GMT
ஆந்திராவின் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமராவதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Tags:    

Similar News