இந்தியா
கைது

டெல்லியில் முன்னாள் எம்.பி.யிடம் செல்போன் பறிப்பு

Published On 2022-03-15 09:11 GMT   |   Update On 2022-03-15 09:11 GMT
டெல்லியில் முன்னாள் எம்.பி.யிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் விஜய்கோயல். முன்னாள் எம்.பி.யான இவர் நேற்று இரவு டெல்லி தார்யா கன்ஞ் பகுதியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். டெல்லி செங்கோட்டை அருகே அவர் காரை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர் திடீரென விஜய் கோயல் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் கோயல் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் செல்போன் கொள்ளையனை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சாஜன் என்ற வாலிபரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

Similar News