இந்தியா
கிறிஸ்துமஸ் பண்டிகை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
கிறிஸ்துமஸ் விழா மக்கள் வாழ்க்கையில் அமைதி, கருணை ஆகியவற்றை நிலைநிறுத்துவதோடு சமூக மக்களிடம் ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது என ஜனாதிபதி தெரிவித்தார்.
புதுடெல்லி:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கு, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் செய்தியான அன்பு, கருணை ஆகியவை இன்றும்கூட ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஈர்ப்பது தொடர்கிறது.
நமது வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையும், போதனைகளையும் ஏற்று நடப்பதன் மூலம் நீதியின் மாண்புகள் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைக்க இந்நாளில் நாம் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி – குஜராத்திலும் இரவு நேர ஊரடங்கு