இந்தியா
கொலை

காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தம்... ஆத்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக் கொன்ற வாலிபர்

Published On 2021-12-09 17:23 GMT   |   Update On 2021-12-09 17:23 GMT
ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேந்திரகுமார் கூறியதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் குன்னர் (40). இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே  ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார்.

அப்போது, சுரேந்திரகுமார் வசித்து வரும் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் சாயிப் அலி சந்த் அலி ஷேக் (25) என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அந்த வாலிபர் சுரேந்திரகுமாரிடம் ஸ்பீக்கர் சத்தம் அதிகமாக உள்ளது எனவும், ஒலி அளவை குறைத்து வைக்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேந்தர்  கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திர குமாரை சாயிப் அலி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவரை கீழே தள்ளி தலையை தரையில் மோதி உள்ளார். சாயிப் அலி தாக்கியதில் சுரேந்திர குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 

உடனடியாக, அக்கம்பக்கத்தினர் சுரேந்திரகுமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாயிப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News