செய்திகள்
ஜே.சி.பி.யால் பெண்ணை தாக்க முயன்ற காட்சி

ராஜஸ்தானில் ஜே.சி.பி. இயந்திரத்தால் பெண்ணை இடித்து கீழே தள்ள முயன்ற கொடூரம்

Published On 2021-11-18 13:00 GMT   |   Update On 2021-11-18 13:09 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையே நடைபெற்ற தகராறில், பெண் ஒருவரை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து கீழே தள்ள முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் என்ற இடத்தில் இரு பிரிவினருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இந்த தகராறு கைகலப்பானது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்து கீழே தள்ள முயன்றுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News