செய்திகள்
கஞ்சா பார்சல்கள் (கோப்பு படம்)

ஜார்க்கண்டில் காரில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2021-11-08 09:13 GMT   |   Update On 2021-11-08 09:13 GMT
காரில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்லா:

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டம், பல்கோட் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 23ல் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்தவர்கள், போலீசாரைக் கண்டதும் வேகமாக காரை ஓட்டி தப்பிக்க முயன்றனர். இதனைக்கண்ட போலீசார் காரை வழிமறித்து மடக்கினர். அப்போது, காரை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே இருந்த இரண்டு பேர் தப்பினர். பின் காரை சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காருக்குள் 200 கிலோ எடை கொண்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடன், இரண்டு செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. காரில் இருந்து தப்பிய ஓட்டுனர் மற்றும் மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
Tags:    

Similar News