செய்திகள்
திருப்பதி கோவில்

13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Published On 2021-11-06 12:53 GMT   |   Update On 2021-11-06 12:53 GMT
தென்மண்டல மாநாட்டை ஒட்டி வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி:

மாநிலங்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்துவதற்காக  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில், வருகிற 14-ந்தேதி, தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி தென் மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை ஒட்டி வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News