செய்திகள்
பீகார் - கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
பீகாரில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. இதில் அடிக்கடி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் கள்ளச் சாராயம் அருந்தியதால் சுமார் 26 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
கோபால்கஞ்சில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் நேற்று இறந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என கோபால்கஞ்ச் எஸ்.பி அனந்த்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...போதைப் பொருள் வழக்கில் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே டிரான்ஸ்பர்