செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளி

ஸ்ரீநகரில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு: இரண்டு ஆசிரியர்கள் பலி

Published On 2021-10-07 08:07 GMT   |   Update On 2021-10-07 10:01 GMT
ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி ‘‘ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் பலியான பயங்கரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வரும். நிர்வாகம் இப்போது சாதாரண நிலை என்ற வெற்று முழக்கங்களை முழங்குவதை நிறுத்துமா? குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரில் சாதாரண மக்கள் கொல்லப்படுவது  கடந்த மூன்று நாட்களில் இது ஐந்தாவது சம்பவமாகும். நான்கு சம்பவங்கள் ஸ்ரீநகரில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
Tags:    

Similar News