செய்திகள்
மனைவியை கொலை செய்து விட்டு, ரத்தக்கறை கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைநை்த நபர்
டெல்லியில் தன்னை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தற்காக மனைவியை கொலை செய்து, கத்தியுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்தவர் சமீர் (45 வயது). இவரது மனைவி சாபனா (40 வயது). இவர்களுக்கு 21 வயது மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். சமீருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இப்பழக்கத்தை விடுமாறு அவரது மனைவி சாபனா இவருடன் அடிக்கடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை வாதம் முற்றிய நிலையில், சமீர் தன் மனைவியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சாபனாவை அருகிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கிடையே சமீர் கத்தியும் ரத்தமுமாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து துணைக்காவல் ஆணையாளர் பர்விந்தர் சிங், காவல்துறைக்கு காலை 7.47 மணிக்கு தகவல் கிடைத்தது, பின் சமீர் மங்கள்புரி காவல்நிலையத்தில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் தன் மனைவியை தானே கொலை செய்துவிட்டதாக கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சாட்சியங்களை அடிப்படையாக க்கொண்டு வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளாதாக கூறினார். விசாரணையில், எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தன்னை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தற்காக பழிவாங்குவதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக சமீர் போலிசாரிடம் கூறியுள்ளார்.