செய்திகள்
மேகாலயாவில் 4.1 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்
மேகாலயாவில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஷில்லாங்:
மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.