செய்திகள்
அரியானா, டெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
தலைநகர் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் இன்று இரவு 10.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.