செய்திகள்
டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையம் முன் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற பயணிகள்
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்த நிலையில், மெட்ரோ ரெயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பின் சதவீதம் குறைந்ததன் காரணமாக மெட்ரோ ரெயில் சேவைக்கு டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் முக்கியமான ரெயில் நிலையங்களில் குறிப்பிட்ட நுழைவாயில்கள் வழியாக மட்டுமே பயணிகள் செல்லவும், வெளியேறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று மாலை மத்திய தலைமைச்செயலக ரெயில் நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.