செய்திகள்
சிவசங்கர் பாபாவை தமிழகத்துக்கு அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி
சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கைது செய்தனர்.
புதுடெல்லி:
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்ததையடுத்து அவர் மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படியுங்கள்...சிவசங்கர் பாபா டெல்லியில் கைது
மாயமான சிவசங்கர் பாபாவை தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கப்பட்டது. இதனையடுத்து அவரை தமிழகத்துக்கு அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.