செய்திகள்
மகாராஷ்டிராவில் ஜுஹு பகுதியை சூறையாடிய டவ்-தே புயல்
டவ்-தே புயல் காரணமாக கனமழை மற்றும் சூறாவளி காற்றால் ஜுஹு பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளம் தேங்கிய வண்ணம் உள்ளது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ்-தே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களை கடந்து இன்று இரவு குஜராத் கடலோர பகுதியில் கரையை கடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தை கடக்கும்போது கடற்கரை பகுதியை சூறையாடியது.
இன்று மகாராஷ்டிராவின் ஜுஹு பகுதியில் அதிக கனமழை பெய்ததுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதில் மரங்கள் வோரோடு சாய்ந்தனர். தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
#WATCH Maharashtra | Juhu beach in Mumbai remains deserted, sea conditions turn rough. #CycloneTauktaepic.twitter.com/xWpjSstieM
— ANI (@ANI) May 17, 2021