செய்திகள்
போபால் ஏஎஸ்பி

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-05-17 12:24 GMT   |   Update On 2021-05-17 12:24 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் போபாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங்க் சிங்காரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து போபால் ஏ.எஸ்.பி. ராஜேஷ் சிங் பதோரியா கூறுகையில் ‘‘உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு முடிவடைந்துள்ளது. ரிப்போர்ட் வர வேண்டும். அவருடைய அம்மா மற்றும் மகனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அங்கு வீட்டி உதவி வேலை செய்து வந்தவரிடமும், அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி கருத்து கூறுவது மிகவும் முன்னதாகவே இருக்கும். நாங்கள் சாட்சிகளை கண்டறிந்ததும், சட்டப்பூர்வ நடவடிக்க எடுக்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News