செய்திகள்
மேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
பா.ஜனதாவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி.யாக உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்காள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்று ஒருபக்கம் தலைவிரித்தாட மறுபக்கம் மக்கள் வாக்களித்தனர். மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜனதா 70-க்கும் மேற்பட்ட இடத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த பா.ஜனதாவின் ஜெகனாத் சர்கார், நிசித் பிரமானிக் ஆகியோர் முறையே சாந்திபூர், தின்ஹட்டா ஆகியோர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டனர்
ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை இன்று சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் வழங்கினர்.
அதன்பின் ‘‘கட்சியின் முடிவை நாங்கள் பின்பற்றினோம். நாங்கள் எங்களுடைய எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது’’ நிசித் தெரிவித்தார்.
ஏற்கனவே 294 தொகுதிகளில இரண்டு இடங்களில் வேட்பாளர் மறைவு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. தற்போது இருவர் ராஜினாமா செய்துள்ளதால், நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.