செய்திகள்
கள்ளச் சாராயம்

கள்ளச் சாராயம் குடித்ததால் 8 பேர் மரணம்

Published On 2021-05-11 23:41 GMT   |   Update On 2021-05-11 23:41 GMT
கள்ளச் சாராயம் குடித்ததால் 2 கிராமத்தை சேர்ந்த 5 பேர் இறந்துபோனார்கள்.
அம்பேத்கர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜெய்த்பூர் பகுதியில், வாந்தி மற்றும் மயக்கத்துடன், சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களில் அருகருகே உள்ள 2 கிராமத்தை சேர்ந்த 5 பேர் இறந்துபோனார்கள்.

போலீசார் தகவல் அறிந்து சென்று விசாரித்தது அந்த பகுதியில் போலியாக மது தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை சாப்பிட்ட அவர்கள் இறந்துள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல அருகில் உள்ள அசாம்கர் மாவட்டத்திலும் மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அறிக்கை கூறுகிறது. அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சம்பவ இடம் சென்று விசாரித்தார்.
Tags:    

Similar News