கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம்-பெங்களூரு இடையேயான ரெயில் வழிதடத்தில் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தினமும் செல்லும் இந்த ரெயிலில் சம்பவத்தன்று கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். பயணத்தின் போது ரெயில்வே டிக்கெட் பரிசோதகரை அணுகி தனக்கு குளிர்சாதன வசதி உள்ள பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து தருமாறு கோரினார்.
அந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.
இதைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் அந்த டிக்கெட் பரிசோதகரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.