செய்திகள்
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார் - வாக்களித்த பிறகு பா.ஜனதா வேட்பாளர் பேட்டி
நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார் என பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இவர் கடந்த காலங்களில் மம்தாவுக்கு விசுவாசமாக இருந்தவர். தற்போது அவ ருக்கு எதிராகவே சுவேந்து அதிகாரியை பா.ஜனதா களத்தில் இறக்கி உள்ளது. நந்திகிராம் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டுப்போட்டு முடிந்த பிறகு சுவேந்து அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நந்திகிராமில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு அறிமுகமானவர்கள். இதனால் தேர்தலில் நான் வெற்றி பெறுவேன். மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவார். நந்திகிராமம் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.