செய்திகள்
சல்மான் கான் (கோப்புப்படம்)

சல்மான் கானின் குதிரை எனக்கூறி பெண்ணிடம் 12 லட்சம் ரூபாயை பறித்த மோசடிக்காரர்கள்

Published On 2021-02-11 16:46 GMT   |   Update On 2021-02-11 16:46 GMT
சல்மான் கானின் சொந்த குதிரையை விற்க இருப்பதாக கூறிய மோசடிக்காரர்களிடம் 12 லட்சம் ரூபாயை பரிதாபமாக ஒரு பெண் இழந்த சோகம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ள்து.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் குதிரை மீது அன்பு கொண்டவர். இவர் குதிரையுடன் இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இவரது பண்ணை வீட்டில் குதிரைகள் உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்பாய் சிங், ராஜ்ப்ரீத் உள்பட மூன்று பேர் ஒரு பெண்ணிடம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் படத்தை காட்டி, இந்த குதிரை விற்பதற்கு தயாராக உள்ளது எனக் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் முதலில் நம்பவில்லை. அந்த மூன்று மோசடிக்காரர்களும் ஏற்கனவே அவரது பண்ணையில் உள்ள குதிரைகளை விற்றுள்ளார் என மனதை மாற்றியுள்ளனர். அதை வாங்கி சல்மான் கானின் குதிரை என்ற நீங்கள் விற்றால் அதிக பணம் பெறலாம் என ஆசையை தூண்டியுள்ளனர்.

அதன்பிறகு, அந்த பெண் 12 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர்கள் கேட்ட 12 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டர். ஆனால் அந்த மூன்று பேரும் குதிரையை ஒப்படைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த அந்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் புகார் அளித்தும், மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பெண் ஜோத்பூர் உயர்நீதிமன்றத்தை நாடி, நேர்மையாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட முறையிட்டார்.

சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கமிஷனரை இதுகுறித்து புகார் அளிக்கவும், துணை கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.
Tags:    

Similar News