செய்திகள்
கோப்புப்படம்

எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்கு

Published On 2021-02-02 11:59 GMT   |   Update On 2021-02-02 11:59 GMT
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணும் இன்று துப்பாக்கி தாக்குதல் நடத்தியதுடன், கொத்துக் குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை பல்வேறு இடங்களில் சிறிய வகை துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும், மோர்தாஸ் கொத்து குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 5400-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் குவாஸ்பா, கெர்னி, மெந்தர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
Tags:    

Similar News