செய்திகள்
வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நாளை நடைபெறும்- வெங்கையா நாயுடு

Published On 2021-02-02 04:52 GMT   |   Update On 2021-02-02 04:52 GMT
மாநிலங்களவையில் இன்று விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நடைபெறாது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய பாராளுமன்றம் கடந்த 29-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி உரையில் விவசாயிகள் போராட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதனால் இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ‘‘நான் இன்று விவாதத்தை தொடங்க விரும்பினேன். ஆனால், விவாதம் மக்களவையில் முதலில் நடக்க வேண்டும் என நான் சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்து நாம் ஜனாதிபதி உரைமீதான விவாதத்தை நாளை தொடங்க ஏற்றுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.
Tags:    

Similar News