செய்திகள்
நக்சலைட்

சத்தீஸ்கரில் நக்சலைட் சுட்டுக்கொலை: தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்

Published On 2021-01-16 14:11 GMT   |   Update On 2021-01-16 14:11 GMT
சத்தீஸ்கர் மாநிலம் பிஜபுர் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு ரூ. 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் குத்ரு- கேதுல்னார் காட்டுப்பகுதிக்கு இடையே மாலை 4.30 மணியளவில் பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலைட்டுக்கும் இடையில் கடும் துப்பாக்சிச் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் துப்புக்கொடுத்தால் தலைக்கு ரூ. 8 லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் தகவலை பிஜபுர் எஸ்.பி. கம்லோசன் காஷ்யத் தெரிவித்தார்.
Tags:    

Similar News