செய்திகள்
சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை

Published On 2020-12-05 02:52 GMT   |   Update On 2020-12-05 02:52 GMT
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது.
மும்பை :

சிவசேனாவின் கருத்துகளை அதிரடியாக கூறிவருபவர் அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.. அந்த கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இதய அடைப்பு நீக்க (ஆஞ்சியோபிளாஸ்டி) சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட அவரது தம்பி சுனில் ராவத் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அவருக்கு (சஞ்சய் ராவத்) இதய அடைப்பு நீக்க சிகிச்சையாக ஏற்கனவே 3 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் மீ்ண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராபி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதய ரத்த குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டது தெரிவந்தது. இதனால் சீரான ரத்த ஓட்டத்திற்காக அவருக்கு மேலும் 2 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவர் நலமாக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News