செய்திகள்
ஜிஎஸ்டி

நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

Published On 2020-12-01 19:31 GMT   |   Update On 2020-12-01 20:03 GMT
நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரிவருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் கிடைத்த தொகையை காட்டிலும் 1.4 சதவீதம் அதிகம்.

மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 19 ஆயிரத்து 189 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 25,540 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 51,992 கோடி ரூபாயும், செஸ் மூலம் ஈட்டப்பட்ட 8,242 கோடி ரூபாயும் அடங்கும்.     

கடந்த நவம்பர் மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது, உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த வருவாயைவிட 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News