செய்திகள்
ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது - ராஜ்நாத் சிங்

Published On 2020-11-04 13:25 GMT   |   Update On 2020-11-04 13:25 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முசாபர்பூர்:

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. 55 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த நிலையில், நேற்று 2-ம் கட்ட தேர்தல், 94 தொகுதிகளில் நடந்தது. 2 ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 53.51 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வரும் 7 ஆம் தேதி 78 தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அந்தவகையில் பீகாரின் முசாபர்பூரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும். அதை இந்தியாவின் ஒரு பகுதியாக தான் கருதுகிறோம். எதிர்காலத்திலும் அது இந்தியாவுடன் தான் இருக்கும். இது நாடாளுமன்றத்தின் தீர்மானம்” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News