செய்திகள்
மரணம்

பட்டாசு குடோனில் தீ விபத்து- 3 பேர் பலி

Published On 2020-11-04 08:55 GMT   |   Update On 2020-11-04 08:55 GMT
உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
குஷிநகர்:

உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டிடத்தின் அண்டர்கிரவுண்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் அருகில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. 
Tags:    

Similar News