செய்திகள்
முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று காலை 9 மணிக்கு மாநிலங்களவை கூடியதும், புதிய உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.தேவகவுடா பதவியேற்றார். அவருக்கு அவைத்தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.