செய்திகள்
மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த வருடமே வழங்க வேண்டும் எனக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த இட ஒதுக்கீட்டை இந்த வருடமே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.