செய்திகள்
மறைந்த சுஷாந்த், சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத்

சுஷாந்த் சிங் எங்களுடைய மகன்: எங்களுக்குள் என்ன பகை இருக்கும்?- சஞ்சய் ராவத் சொல்கிறார்

Published On 2020-08-14 07:03 GMT   |   Update On 2020-08-14 07:03 GMT
சுஷாந்த் சிங் எங்களுடைய மகன், அவரது மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மம் வெளிப்பட வேண்டும் என சிவ சேனா தலைவர சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று சுஷாந்தின் தந்தை புகார் கூறினார். ஆனால், மகாராஷ்டிரா போலீஸ் அவரது தந்தையின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பீகார் மாநில போலீசில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்பட ஆறு பேர் மீது சுதாந்தின் தந்தை புகார் அளித்தார். அதனடிப்படையில் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், பீகார் அரசு சார்பில் சிபிஐ விசாரணை கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மகாராஷ்டிரா எங்களது காவல்துறை இந்த வழக்கை சிறப்பாக விசாரிக்கும் சிபிஐ தேவையில்லை என்று கூறி வருகிறது. இதனால் பீகார் - மகாராஷ்டிரா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் எங்கள் மகன் என்று சிவ சேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷாந்த் சிங் ராஜ்புத் கூறுகையில் ‘‘சுஷாந்த் சிங் ராஜ்புத் எங்கள் மகன். அவர் மும்பையில் வாழ்ந்தார். அவர் ஒரு நடிகர். பாலிவுட் மும்பையின் குடும்பம். நாங்கள் அவர்களது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், எங்களுக்குள் என்ன பகை இருக்கும்?. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மம் வெளிப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

அவரின் குடும்பத்திற்கான அனுதாபம் படுகின்றோம். நேற்று, நான் அவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், நான் அவர்களை மிரட்டியதுபோன்று அது தெரிந்துள்ளது. அது அச்சுறுத்தலா? மும்பை போலீசை நம்ப வேண்டாம். அவர்கள் சிறப்பாக பணி செய்யவில்லை என்று நினைத்தால், அதன்பின் சிபிஐ செல்லலாம்.
Tags:    

Similar News