செய்திகள்
10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி 10 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இன்று இந்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை ஆலோசனை தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.