செய்திகள்
பினராயி விஜயன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு தலா ரூ.10 லட்சம்: காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்- பினராயி விஜயன்

Published On 2020-08-08 10:26 GMT   |   Update On 2020-08-08 10:26 GMT
கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், காயம் அடைந்தவர்களின் செலவை அரசு ஏற்கும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், காயம் அடைந்தவர்களின் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும். விமான விபத்தில் உயிரிழந்த நபர்கள் உள்பட பயணித்த அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News