செய்திகள்
கோப்பு படம்

மேற்கு வங்காளத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2020-06-26 16:29 GMT   |   Update On 2020-06-26 16:29 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ராஞ்சி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள சில மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தி பொதுப்போக்குவரத்து போன்ற நடைமுறைகளை அமல்படுத்தியும் வருகின்றன.

இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியுடன் (ஜூன்) முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில், கொரோன வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு 
நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்காள மாநிலமும் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News