செய்திகள்
மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும்: மாயாவதி
எல்லையில் பதற்றம் நிலவும் இந்நேரத்தில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் முழு முதிர்ச்சியுடனும், ஒற்றுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், ஒட்டுமொத்த நாடும் சோகத்திலும், கோபத்திலும் இருக்கிறது. எல்லையில் பதற்றம் நிலவும் இந்நேரத்தில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் முழு முதிர்ச்சியுடனும், ஒற்றுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருக்கலாம். இருப்பினும், தேசநலனை கவனித்து, எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடமே விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், ஒட்டுமொத்த நாடும் சோகத்திலும், கோபத்திலும் இருக்கிறது. எல்லையில் பதற்றம் நிலவும் இந்நேரத்தில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் முழு முதிர்ச்சியுடனும், ஒற்றுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருக்கலாம். இருப்பினும், தேசநலனை கவனித்து, எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடமே விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.