செய்திகள்
எல்லையில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் - மன்மோகன் சிங் வலியுறுத்தல்
சீனாவுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம்.
சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம். சீன விவகாரம் தொடர்பாக தவறான தகவல் தருவது சிறந்த தலைமைக்கு அழகல்ல. சீனாவின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் வார்த்தைகள் அமைந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.