செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

மகாராஷ்டிராவில் இன்று 2436 பேர் கொரோனாவால் பாதிப்பு: 139 பேர் பலி

Published On 2020-06-05 14:15 GMT   |   Update On 2020-06-05 14:15 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 139 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் இன்று 2,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி 80,229 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 2,849 ஆக உயர்ந்துள்ளது. 35,156 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News