செய்திகள்
பள்ளி மாணவிகள்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

Published On 2020-05-08 12:24 GMT   |   Update On 2020-05-08 12:24 GMT
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ  பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வரும் ஜுலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத்தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News